;
Athirady Tamil News

இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய்!

0

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் 0112 112 718 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்க முடியும்.

அஃப்லாடாக்சின் தீங்கு
மனித மற்றும் விலங்கு கல்லீரல் திசுக்களில் சேதப்படுத்தும் விளைவில் உள்ளது. கடுமையான சந்தர்ப்பங்களில், இது கல்லீரல் புற்றுநோய் அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தும்.

அஃப்லாடாக்சின் தீங்கு விளைவிப்பதில் மிக முக்கியமான ஒன்றாகும். இது மரணத்தையும் விளைவிக்கும்.

அஃப்லாடாக்சின் b1 இயற்கையாகவே அசுத்தமான உணவில் மிகவும் காணப்படும், மேலும் இதன் நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோயானது மிகவும் வலிமையாக காணப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.