;
Athirady Tamil News

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட மாலைதீவுப் பிரஜை

0

மாலைதீவுப் பிரஜை ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (11) இரவு இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு செல்லவிருந்த விமானத்தில் இருந்து புறப்படுவதற்காக குறித்த நபர் வந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை
அவரது பொருட்களை சோதனை செய்து பார்த்ததில் ரிவோல்வர் போன்ற துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட மாலைதீவு பிரஜை 58 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.