;
Athirady Tamil News

காதலியை கொடூரமாக கொன்ற நபருக்கு மன்னிப்பு வழங்கிய புடின்!

0

காதலியை 111 முறை கத்தியால் குத்தி சித்திரவதை செய்து கொன்ற ரஷ்ய நபருக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ரஷ்ய நபர் உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கியதாக தெரியவருகின்றன.

தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொன்றதற்காக விதிக்கப்பட்ட 17 வருட சிறைத்தண்டனையை ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அனுபவித்துள்ளார்.

மன்னிப்பு வழங்கிய ரஷ்ய அதிபர்
காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் கன்யூஸ் தனது முன்னாள் காதலியை சீரழித்து, 111 முறை கத்தியால் குத்தி மூன்றரை மணி நேரம் சித்திரவதை செய்து கொன்றுள்ளார்

பின்னர் குறித்த நபர் ரஷ்ய ராணுவ வீரர் என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.

தற்போது உக்ரைன் எல்லைக்கு கன்யூஸ் மாற்றப்படும் தகவலை சிறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.