;
Athirady Tamil News

பலாங்கொடை மண்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லை !

0

பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்த மண்சரிவில் மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பலாங்கொடை, கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் இந்த மண்சரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.