;
Athirady Tamil News

நிந்தவூரில் கோர விபத்து! இருவர் உயிரிழப்பு

0

அம்பாறை – நிந்தவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

மேலதிக விசாரணை
விபத்தில் 23 வயதுடைய இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞனான 19 வயது மதிக்கத்தக்கவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த இருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.