;
Athirady Tamil News

யாழில். பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடி மத்தியை சேர்ந்த அருச்சுனன் சுந்தரலிங்கம் (வயது 55) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த வேளை , இரத்த புடையன் பாம்பு அவரை தீண்டியுள்ளது.

அதனை அடுத்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , கடந்த 16 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அந்நிலையில்  வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.