;
Athirady Tamil News

இலங்கை வரவுள்ள பிரம்மாண்ட சுற்றுலா கப்பல்

0

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பல், எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உல்லாச பயண துறையை ஊக்குவிக்கும் வகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இலங்கைக்கு இந்த கப்பல் வருகைதரவுள்ளது.

உல்லாச பயணிகள்
மேலும், உல்லாச பயண துறையில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான YARA GLOBAL (pvt Ltd) நிறுவனத் தலைவர் H.M.Riyaldeen இந்தக் கப்பலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனடிப்படையில், இலங்கை வரும் உல்லாச பயணிகளை இலங்கையின் சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யவும், இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலும் உல்லாச பயணிகளோடு மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.