;
Athirady Tamil News

கிழக்கில் ஆளுநரால் நான்கு மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல வீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரால் வைத்தியசாலை நிர்மாணித்துத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்த வேண்டுகோளுக்கு இணங்க 34 மில்லியன் ரூபா பெறுமதியில் அம்பாறை – கோணோக்கொல்ல கிராமத்தில் வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் செந்தில் தொண்டமானால் நாட்டப்பட்டது.

அதற்கமைய நான்கு மாத காலப்பகுதிக்குள் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட மக்கள் ஆளுநரின் இத்துரித வேலைத்திட்டத்திற்காக நன்றித் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.