;
Athirady Tamil News

ஒரே நேரத்தில் 10 பேரை காவு வாங்கிய சுரங்கம்: தென் அமெரிக்காவில் நடந்த சம்பவம்

0

தென் அமெரிக்க நாடான சுரினாமில் தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் அமெரிக்காவில் சோகம்
தென் அமெரிக்காவில் சட்டவிரமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கமானது இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள், மீட்புப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு மீட்டெடுக்க முயன்றுள்ளனர்.

இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது.

சுரங்கம் இடிந்து விழுந்தது தொடர்பில் இது வரையில் ஒரு காரணமும் வெளியாகவில்லை.

சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.

கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது.

மேலும் இது குறித்து அந்நாட்டின் அதிபர் தெரிவிக்கையில், “சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.