;
Athirady Tamil News

பாடசாலைகளுக்கு நீண்ட நாட்கள் விடுமுறை!

0

இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரியா ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.