;
Athirady Tamil News

காத்தான்குடியில் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக உயிரிழந்த 06 மாத குழந்தை!

0

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று (24.11.2023) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

பற்றிமா புரத்தில் உள்ள தனது வீட்டில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் பாம்பு தீண்டி இருக்கிறது.

மயக்க நிலையில் இருந்த குழந்தை
தாய் காலை 7 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்தார்.

குறித்த குழந்தை உயிரிழந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது.

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே மேற்படி பாம்பு வீட்டினுள் நுழைந்து குழந்தையை தீண்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை தீண்டிய பாம்பை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.