;
Athirady Tamil News

அவுஸ்தியேலிய செல்ல முயன்ற முல்லைத்தீவு , கிளிநொச்சி இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

0

போலி விசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இரு இளைஞர்கள் இன்று சனிக்கிழமை (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மற்றும் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களை சேர்ந்த 25, 27 வயதுடைய இளைஞர்களே கைதாகியுள்ளனர்.

சந்தேகமடைந்த அதிகாரிகள்
கைதான இளைஞர்கள் இன்று காலை 07.30 மணியளவில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர்.

விமான அனுமதிக்கான சோதனையின்போது இவர்களது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதிகாரிகளின் சோதனையின்போது விசாக்கள் போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதோடு, அவை கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள தரகர் ஒருவரால் தயாரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இளைஞர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.