;
Athirady Tamil News

குளியலறையில் மீட்கப்பட்ட வங்கி அதிகாரியின் சடலம்

0

பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம டென்சில் கொப்பேகடுவ மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தன ரூபசிங்க (39), தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரியான சுதத் சிந்தன ரூபசிங்க (39) என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனியாக வசித்து வந்ததாகவும்
குறித்த நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்படி முகவரியில் தனது தாயாருடன் வசித்து வந்ததாகவும், பின்னர் தனது தாயார் பூசகர் ஆனதன் காரணமாக இந்த இடத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குளியலறையின் ஜன்னலை உடைத்து
இவர் வசித்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பேரில் காவல்துறையினர் வந்து குளியலறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குறித்த நபரின் சடலம் கிடப்பதை கண்டு மீட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.