;
Athirady Tamil News

முல்லைத்தீவு மாவீரர் நாள் எழுச்சி இடத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் குழப்பம் (PHOTOS)

0

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நாள் எழுச்சி இடத்தில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மாவீரர் நாளாக கார்த்திகை 27 ஆம் நாள் திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகி வரும் நிலையில் பொலிஸார் பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரர் நாள் எழுச்சி இடத்திற்குள் திடீரென நுழைந்த பொலிஸார் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடப்பட்ட சிவப்பு,மஞ்சள் கொடிகளை உடனடியாக அகற்றுமாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.