;
Athirady Tamil News

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பிரித்தானியா எடுத்துள்ள சிறந்த தீர்மானம்

0

பிரித்தானியவிற்கு புலம்பெயர்ந்த திறன்மிக்க வெளிநாட்டு தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த தீர்மானமானது, புலம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடுமையாக்கவுள்ள விதிகள்
அத்தோடு, அந்த தீர்மானத்திற்கு பிறகு புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், சட்டப்பூர்வ குடியேற்றத்தில் தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இடம்பெயர வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு தொடர்பான விதிகள் கடுமையாக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டு திறன்மிக்க பணியாளர்கள் பெற வேண்டிய சம்பளம் சுமார் 26,200 பவுண்டுகள் எனவும், புதிய திட்டத்தின் கீழ் அதனை 38,700 பவுண்டுகளாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.