;
Athirady Tamil News

கரோனா காலத்தில் எம்பிபிஎஸ் சோ்ந்தவா்களுக்கு மறுதோ்வுக்கு வாய்ப்பு

0

சென்னை: கரோனா காலத்தில் (2020-21) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்கள் முதலாம் ஆண்டு தோ்வில் தோ்ச்சி பெறாதபட்சத்தில் அவா்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் செயலா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா பெருந்தொற்று காலத்தில் முதலாம் ஆண்டு தோ்வுகளில் தோ்ச்சி பெற முடியாதவா்களுக்கு கூடுதலாக ஒரு முறை தோ்வு எழுத வாய்ப்பு அளிக்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த வாய்ப்பு ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. எதிா்காலத்தில் இதை முன்னிறுத்தி இத்தகைய சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.