;
Athirady Tamil News

மகனால் வெட்டப்பட்ட கிளையால் பறிபோன தந்தையின் உயிர்!

0

மொனராகலை பிரதேசத்தில் மரத்தின் கிளை ஒன்று தலையில் வீழ்ந்ததில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

75 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், வீட்டிற்கு அருகில் இருந்த பலா மரம் ஒன்றை தனது மகன் மூலமாக வெட்டிக்கொண்டிருக்கும் போது மரக்கிளை ஒன்று இவரது தலையில் வீழ்ந்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மொனராகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.