;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஒருவர் கைது

0

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பிரஜை ஒருவரின் அநாகரிகமான செயற்பாடு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த இலங்கை விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரஜை
குறித்த இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

விமானத்தில் பயணித்த சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்திய பிரஜை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.