;
Athirady Tamil News

ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர்

0

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல்நீரை செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் இரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருக்கலாம்.ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் இராணுவம் நம்புகிறது.

சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணி
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனை
இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் இராணுவம் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.