;
Athirady Tamil News

14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் மோடி

0

கடந்த 2014 முதல், 14 நாடுகளின் உயரிய விருதுகளை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் பெற்றுள்ளதோடு, பிரதமராக பதவியேற்றது முதல், இதுவரை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா, பூட்டான், பிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

தலைமைத்துவத்திற்கான அங்கீகாரம்
பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரமாகும் என பாஜகவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.