;
Athirady Tamil News

கொழும்பில் மர்ம மரணம்

0

கொழும்பு 07 , விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கருவாத்தோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மித்ராணி பெர்னாண்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் அறையின் தரையில் முகம் குப்புறக் கிடந்ததுடன், வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா அல்லது சாதாரண மரணமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், கருவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.