;
Athirady Tamil News

பல கோடிகளில் சம்பாதிக்கும் பிரபல நாய்: முதலாளி மேலாளர் ஆன சுவாரஸ்ய கதை

0

சமூக ஊடகத்தில் பிரபலமான ப்ரூடி என்ற நாய் கோடிக்கணக்கில் இணையத்தில் சம்பாதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல கோடிகளை சம்பாதிக்கும் நாய்
பொதுவாகவே தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பலர் இணையதள content-களை உருவாக்கி அதையே தங்களது தொழிலாகவும் மாற்றி வருகின்றனர்.

இதில் செல்லப்பிராணிகளான நாய்களும் விதிவிலக்கல்ல, அந்த வகையில் ப்ரூடி என்ற பெயர் கொண்ட கோல்டன் டூடுல் இனத்தை சார்ந்த நாய் ஒன்று கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

ப்ரூடி என்ற பெயர் கொண்ட இந்த நாய்க்கு 4 வயது மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை ரூ. 8 கோடியே 29 லட்சம் சம்பாதித்துள்ளது. இந்த ப்ரூடி நாயிக்கு டிக்டாக்கில் கணக்கு உள்ள இதனை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் ப்ரூடிக்கு இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கும் உள்ளது, அதிலும் 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இந்த ப்ரூடி நாய் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ளது.

உரிமையாளர் தான் மேலாளர்
ப்ரூடியின் உரிமையாளரான கிளிஃப் அதன் மேலாளராக செயல்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், ப்ரூடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இதன் மூலமாக ப்ரூடி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது ப்ரூடி தற்போது காவல்துறையில் இணைந்துள்ளது வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.