;
Athirady Tamil News

நிறுத்தப்படும் கல்வி செயற்பாடுகள்! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு
டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் இவ்வாறு மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.