;
Athirady Tamil News

பன்முகத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ; ரணில் விக்ரமசிங்க

0

நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் மாவட்டங்களின் பன்முகப்படுத்தப்பட்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21.12.2023) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட திட்டத்திற்காக எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.