;
Athirady Tamil News

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

0

ஹட்டன் டிக்கோயா- படல்கல தோட்டத்தில் கடந்த 4ஆம் திகதி குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் இன்று வௌ்ளிக்கிழமை (2024.01.05) உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயதான சதாசிவம் சிந்தை என்ற பெண், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மேலும் குளவி கொட்டின் போது 14 வயது சிறுவன் உட்பட 06 ஆண்கள் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.