;
Athirady Tamil News

இலங்கைத் தமிழர்களுக்கு கவிப்பேரரசு வழங்கிய அன்பளிப்பு

0

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழர்களுக்காக கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டைக்கல்லாறு பகுதியில் இயங்கும் நூலகத்துக்கே வைரமுத்து இந்த நூல்களை வழங்கியுள்ளார்.

ஆளுநர் வலியுருத்து
கவிப்பேரரசை அவரது இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்று சந்தித்த வேளை கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கான புத்தகங்களின் தேவையைக் வலியுறுத்தியுள்ளார்.

அதனை கருத்தில் கொண்ட அவர் தான் எழுதிய நூல்களின் தொகுதியை கிழக்கு ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.

இறுதியாகக் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட மகாகவிதை உட்படக் வைரமுத்து 39 நூல்களை எழுதியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.