;
Athirady Tamil News

ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபா மோசடி!

0

பதுளை – தியத்தலாவை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபாவை மோசடியாப் பெற்ற நபர் தியதலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

பதுளை ஹல்தும்முல்ல பிரதேசத்தை நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலிருந்து சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.