;
Athirady Tamil News

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

0

தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா எனும் தொனிப்பொருளில் யாழில் நாளை தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்துக்கொள்ளவுள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டு தைப்பொங்கல்
இந்நிலையில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழாவானது தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது.

விஜயதாச ராஜபக்ச பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள், வர்த்தக சமூகத்துடன் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.