;
Athirady Tamil News

யாழில் பிக்மீ சாரதி மற்றும் வாடிக்கையாளருக்கு முச்சக்கர வண்டி சாரதியால் நேர்ந்த நிலை!

0

கோண்டாவிலில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் பிக்மீ சாரதி ஒருவரை மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் இன்று மதியம் 2.30 க்கு மேல் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.

பிக்மீ சாரதி மட்டும் இல்லாமல் இவரை அழைத்த பிரயாணியும் குறிப்பிட்ட மற்றைய சாரதியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் இருந்த பயணிகள் இருவர் PickMe மூலம் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தினார்.

இதன்போது குறித்த முச்சக்கர வண்டி சாரதி வாடிக்கையாளர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டவேளை, அவ்விடத்திற்கு வந்த மற்றொரு முச்சக்கர வண்டி சாரதி அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதேவேளை, பயணியையும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.