;
Athirady Tamil News

மட்டக்களப்பில் பசுக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து யாழில் போராட்டம்!

0

மட்டக்களப்பில் பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பட்டிப் பொங்கல் தினத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அழைப்பின் பேரில் குறித்த போராட்டம் நல்லை ஆதீனத்தின் முன்பாக செவ்வாய்க்கிழமை (16) மாலை நடைபெற்றது.

இதன்போது மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், சைவ சமய ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல்தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என போராட்டகாரர்கள் குற்றஞ்சாட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.