;
Athirady Tamil News

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

0

தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையில் கொழும்பில் இன்றையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறிதரன், சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம் சாணக்கியன் , சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோ நோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு
இந்த சந்திப்பில் தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமை தொடர்பாக தமிழர் தரப்புகள் தமது அதிருப்தியை இதன்போது தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.