;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விசேட சலுகைகள்: வெளியான மகிழ்ச்சி தகவல்

0

அதிபரின் பணிப்புரைக்கமைய அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மொபிடெல் நிறுவனத்தினால் வழங்கப்படும் உபகார பெகேஜ் மீண்டும் வழங்கப்படவுள்ளது.

இந்த பெகேஜ்களை புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர் , இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிபரின் பணிப்புரை
அதன்படி, இதன் பயனை அனைவருக்கும் வழங்குமாறும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடத்தில் அதிபர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.