;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் மிகவும் பணக்கார இந்து பெண்

0

பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் பணக்கார இந்து பெண்ணான வாழ்ந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றமையால், அந்நாட்டு மக்கள் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

அதேநேரம் எல்லோரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறமுடியாது, ஆக்கபூர்வமான வழிகளில் சொத்துக்களை சேர்த்தவர்கள் எந்த ஒரு பொருளாதார நெருக்கடியிலும் பாதிக்கப்படுவதில்லை.

பணக்கார இந்து பெண்
அந்தவகையில், பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பெண்ணான சங்கீதா என்பவர் மிகவும் பணக்கார இந்து பெண்ணாக இருந்து வருகிறார்.

45 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் சினிமா துறையில் இருந்து வரும் சங்கீதா கோஹினூர் என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகியுள்ளார்.

அள்ளிக்குவிக்கும் செல்வம்
அதேவேளை, சங்கீதாவின் அசாத்தியமான திறமை மற்றும் அர்ப்பணிப்பு, திறமை பாகிஸ்தான் திரைத்துறையில் இவரை தவிர்க்கமுடியாத ஒருவராக மாற்றியுள்ளது.

இந்நிலையில், அவர் வருடமொன்றிற்கு ரூ.39 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு மத்தியில் தத்தளித்து வரும் நிலையில் இந்து பெண்ணான சங்கீதா செல்வத்தை அள்ளி குவிப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.