;
Athirady Tamil News

பிரித்தானியாவில் 2 சிறுமிகள் உட்பட பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் வழங்கிய தகவல்

0

கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் 2 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள்
பிரித்தானியாவின் நார்விச் பகுதியில் உள்ள சொத்து ஒன்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்மின் குசின்ஸ்கா(Jasmin Kuczynska, 12), நடாஷா குசின்ஸ்கா(Natasha Kuczynska, 8) என்ற இரண்டு சிறுமிகளுடன் தந்தை பார்ட்லோமிஜ் குசின்ஸ்கி(Bartlomiej Kuczynski, 45) என்பவரும் இவர்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் கோஸ்டெஸில் உள்ள Allan Bedford Crescent, என்ற முகவரில் 36 வயதான Kanticha Sukpengpanao என்பவரின் உடலும் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் இறுதியில் கழுத்தில் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக பெண்கள் இறந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த ஜாஸ்மின், நடாஷா மற்றும் சுக்பெங்பனாவ் ஆகியோரின் மரணம் கொலையாக கருதப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரி Chris Burgess, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருடன் தங்களின் எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.