;
Athirady Tamil News

தாயை கொடூரமான கொலை செய்த மகன்

0

நாவலப்பிட்டியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமா என்ற 67 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவில் இரண்டு வாரங்களுக்குள் தாயார் தனது மகன்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

பிரேத பரிசோதனை
நாவலப்பிட்டி வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரான ருச்சிரா நதீரா, பிரேத பரிசோதனையின் போது, ​​தனது இளைய மகனின் தாக்குதலால் தாயின் தலையில் பல காயங்கள் மற்றும் தாடை எலும்பு மற்றும் 22 விலா எலும்புகள் முறிந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரிவித்தார்.

சந்தேக நபர் இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியிருந்ததால் தந்தை தமது மூத்த மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த 17ம் திகதி, அவரது மனைவியும் தாக்கப்பட்டதால், குழந்தையையும் அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தாய் மீது தாக்குதல்
சந்தேகநபர் தனது தாயுடன் வீட்டில் தங்கியிருந்து பின்னர் தகராறு செய்து தன்னை கவனிக்கவில்லை என கூறி தாக்கியுள்ளார். அதன்படி கடந்த 20ஆம் திகதி காலை 8 மணியளவில் தாயை அடித்து வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டிவிட்டு நாவலப்பிட்டி நகருக்கு சென்றுள்ளார்.

மாலை நான்கு மணியளவில் வீடு திரும்பி கதவை திறந்து பார்த்த போது தாய் இறந்து கிடப்பதை கண்டு அயலவர்கள் தகவல் தெரிவித்தார்.

சுகயீனமுற்ற தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்த சந்தேக நபர், மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சூனியம்
அதனையடுத்து, நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்ட போது, ​​தாக்குதலினால் ஏற்பட்ட பல காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தாயை தாக்கியதை சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தனக்கு சூனியம் செய்ததால் சுமார் ஒரு வருடமாக தாயாருடன் கோபமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.