;
Athirady Tamil News

ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதும் குற்றமே வருகிறது சட்டம்!

0

இலங்கையில், ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதை குற்றவியல் குற்றமாக நிறுவவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது தொடர்பான சட்டங்களைத் திருத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஏற்கனவே இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி பெண் மற்றும் ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வது குற்றவியல் குற்றமாக கருதப்படும்.

இதற்கான வரைவை சட்ட வரைவாளர், மேற்கொண்டுள்ள நிலையில், சட்டமா அதிபரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கும் அமைச்சரவை, துறைசார் அமைச்சருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.