;
Athirady Tamil News

சோமாலிய கடற்கொள்ளையர்களின் கடத்தப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகு

0

சிலாபம் – திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த (12.01.2024) ஆம் திகதி இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு, அரேபிய கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.