;
Athirady Tamil News

தேர்தல்கள் நடத்தப்படும் காலம்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

0

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக, உரிய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீடு
அதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஒதுக்கீட்டிற்குள் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிக்க வேண்டும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.