;
Athirady Tamil News

வீட்டுச் சிறைக்கு இம்ரான் மனைவி எதிா்ப்பு

0

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கிலும், மதவிரோத திருமண வழக்கிலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்துள்ளாா்.

இது குறித்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இம்ரான் கான் சிறைவைக்கப்பட்டுள்ள அடியாலா சிறைச்சாலைக்கே தன்னையும் அனுப்பவேண்டும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இம்ரான் பிரதமராக இருந்தபோது சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானிடமிருந்து பரிசாகப் பெற்ற ரூ.157 கோடி மதிப்பிலான ஆபரணங்களை வெறும் ரூ.90 லட்சமாக மதிப்பிட்டு விலைக்கு வாங்கிய வழக்கில் இம்ரானுக்கும், புஷ்ராவுக்கும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த வாரம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

அதையடுத்து, வேறு வழக்குகள் தொடா்பாக இம்ரான் கான் சிறைவைக்கப்பட்டிருந்த அடியாலா சிறைக்கு வந்த புஷ்ரா பீவி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

எனினும், அங்கிருந்து இஸ்லாமாபாதிலுள்ள இம்ரானின் இல்லத்துக்கு அழைத்துவரப்பட்ட அவா், அங்கேயே சிறைவைக்கப்பட்டுள்ளாா்.

பரிசுப் பொருள் முறைகேடு தவிர, இஸ்லாம் மதத்துக்கு எதிராக திருமணம் செய்துகொண்டதாக இம்ரானுக்கும், புஷ்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.