;
Athirady Tamil News

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்கள்: அமைச்சரவை அனுமதி

0

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து குறித்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து யோசனைகளை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அனுமதி
அத்துடன் இந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.

இதன்போது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான நகல் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.