;
Athirady Tamil News

பேராதனை பல்கலைக்கழக பன்றி திருட்டு

0

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு சொந்தமான பண்ணையில் இருந்து சுமார் ஐம்பது கிலோ எடையுள்ள பன்றியை திருடி கொன்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பண்ணை முகாமையாளர் பேராதனை காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பேராதனை பிரதேசத்தில் வசிக்கும் மூவர் பன்றியின் இறைச்சி என சந்தேகிக்கப்படும் ஐந்து கிலோ இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவோடு இரவாக பண்ணையில் கொன்று
உடபேரதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள பண்ணையில் இருந்த சுமார் 50,000 ரூபா பெறுமதியான பன்றியை இரவோடு இரவாக பண்ணையில் கொன்று இறைச்சியை விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் மேலதிக விசாரணை
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதுடன், பேராதனை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் விஜித் விஜேகோனின் பணிப்புரைக்கமைய குற்றப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.