;
Athirady Tamil News

கடலில் மாயமான மாணவர்கள்! ஒருவரின் உடல் மீட்பு

0

அம்பாறை மாவட்ட ஒலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரத்தில் இழுத்து செல்லப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் உடல் ஒழுவில் பகுதியில் கரையொதுகியுள்ளது.

இதனடிப்படையில், சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் சடலமே இன்று(17) காலை கரையொதுங்கியுள்ளது.

மற்றைய மாணவனின் உடல் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அலையில் இழுத்து செல்லப்பட்டு

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றைய தினம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த எட்டு மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

அதாவது, 13-15 வயதுக்குட்பட்ட எட்டு பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கை
குறித்த சந்தர்ப்பத்தில், மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனை தவிர்த்து ஏனைய ஆறு மாணவர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.