;
Athirady Tamil News

மருத்துவமனைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்! 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை!

0

காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் படையினர் நுழைந்து நடத்திய தாக்குதலில் நேற்று முன்தினம் காலை 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் கடந்த திங்கட்கிழமை காலை முதல் இதுவரை வளாகத்திற்குள் 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் படையினர் படுகொலை செய்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய 160 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை நடத்துவதற்காக, அவர்கள் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் கண்டறியப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் கைப்பற்றி உள்ளனர்.

இருப்பினும், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் படையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.