;
Athirady Tamil News

கனடா முழுவதும் தீவிரமாக தேடப்படும் கேரளா நபர்: அதிரவைக்கும் பின்னணி

0

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் 29 வயது பெண் தொடர்பில் ஒரு வாரமாக தேடப்படும் நபர் இந்தியா தப்பியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லால் கண்ணம்புழ பவுலோஸ்
ஒன்ராறியோ மாகாணத்தில் ஓஷாவா பகுதியில் வசித்து வந்த 29 வயது பெண் கடந்த வாரம் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் விசாரணை முன்னெடுத்த Durham பொலிசார், அது கொலை என உறுதி செய்த நிலையில், தற்போது 31 வயதான லால் கண்ணம்புழ பவுலோஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மே 7ம் திகதி ஓஷாவா பகுதி குடியிருப்பு ஒன்றில் 29 வயதான டோனா சாஜன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் லால் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டது.

இந்தியாவுக்கு தப்பியிருக்கலாம்
அத்துடன், கனடா முழுவதும் தீவிரமாக தேடப்படும் நபராகவும் அறிவிக்கப்பட்டார். டோனா சாஜன் மற்றும் தேடப்படும் லால் ஆகிய இருவரும் நன்கு அறிமுகமானவர்கள் என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவர்களின் உறவுமுறை தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், லால் தற்போது இந்தியாவுக்கு தப்பியிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பில் நம்பப்படுகிறது. இந்த விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.