;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி – நேரில் நிலைமைகளை ஆராயும் அமைச்சர்

0

வடமாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயமாக எதிர்வரும் 24மற்றும் 25ஆம் திகதிகளில் ஜனாதிபதி வருகை தரவுள்ள நிலையில் , அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறை சார் தரப்புடன் கலந்துரையாடியதுடன், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களையும் நேரில் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 24ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சை கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டிடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய இன்னமும் 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

கட்டட திறப்பு விழாவுடன் யாழில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.