;
Athirady Tamil News

திருகோணமலையில் மத்ரசா சிறுவன் மாயம் : தந்தை புகார்

0

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் மொறவெவ காவல் பிரிவிலுள்ள ரொட்டவெவ பகுதியில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அநுராதபுர ஈமானியா அறபுக் கல்லூரியில் கல்வி கற்கும் மசூட் அஸ்மட் எனும் 15 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனை கடந்த (16) ஆம் திகதியிலிருந்து காணவில்லையென மொரவெவ காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனமை
காணாமல் போன சிறுவன், அறபு மத்ரசாவில் இருந்து கடந்த 10 ஆம் திகதி அன்று ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து, சனிக்கிழமை (18) அன்று தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் மொறவெவ காவல்துறையில் காணாமல் போன மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மொறவெவ காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.