;
Athirady Tamil News

50 கோடி ரூபா பெறுமதியான ஆம்பருடன் மீனவர் கைது!

0

பேருவளை கரடகொட பகுதியில் திமிங்கில வாந்தி எனப்படும் 30 கிலோ கிராம் ஆம்பருடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருவளை கரையோரப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் 43 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட திமிங்கல ஆம்பரின் பெறுமதி சுமார் ஐம்பது கோடி ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.