;
Athirady Tamil News

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 28 பேருக்கு நேர்ந்த கதி!

0

பாகிஸ்தானின் (Pakistan) கராச்சி (Karachi) நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று  (29) அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, வாசுக் நகருக்கு அருகே பேருந்து விபத்துக்குள்ளாகியது.

22 பேர் காயம்
அதி வேகத்தில் பேருந்து இயக்கப்பட்டதே குறித்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், பேருந்தின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி விதிகளைப் பின்பற்றாமை
பாகிஸ்தானில் வீதி விதிகளை சரியாக பின்பற்றாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் இதுபோன்ற வீதி விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

இந்த மே மாதத்தில் மட்டும் 18ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் 13 பேரும், கடந்த 3ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 20 பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.