;
Athirady Tamil News

மின்சார சட்டமூலம் குறித்து நாடாளுமன்றில் சஜித் வேண்டுகோள்

0

நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்ப திட்டமொன்றை வகுப்பதற்காக ஆராய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,“மின்சார சட்டம் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வாசித்ததன் மூலம் குறித்த சட்டத்தில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாக அறிந்து கொண்டோம்.

உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை
அதனாலேயே மூன்றில் இரண்டு பெரும்பாண்மை அதிகாரத்தால் இங்கு சில பிரிவுகள் நிறைவேற்றப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.

எனவே, அதனை வியாழக்கிழமை அவசர அவசரமாக கொண்டுவராமல், அதில் இருக்கும் குறைகளையும் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகளையும் ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து எதிர்காலத்தில் அது தொடர்பில் சரியான தீர்ப்பை எடுப்போம்.

மின்சாரக் கட்டணம்
அதேவேளை, நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்ப ஒரு அலகிற்கான குறைந்த கட்டணத்தில் மின்சார கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் மின்சார சபைக்கும் நட்டம் ஏற்படாத வகையில் சாத்தியமான ஒரு எண்ணக்கருவை கொண்டு சிறந்த திட்டமொன்றை வகுப்பதற்காக ஆராய்வோம்.

எனவே, மின்சார சட்டத்திலுள்ள குறைகளை தீர்த்து இந்த விடயங்களை முன்கொண்டு செல்வோம்“ என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.