;
Athirady Tamil News

இடமாற்றப்படும் கொலன்னாவ நகர்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

0

கொலன்னாவ நகரை அந்த இடத்தில் இருந்து அகற்றி அதே பகுதியில் மேடான இடத்தில் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இந்த புதிய நகர திட்டத்தின் கீழ், தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள், வணிக வளாகங்கள் போன்றவை உயரமான பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன.

அத்துடன், கொலன்னாவையின் புதிய நகரத்திட்டத்தின் பிரகாரம், அனுமதியற்ற கட்டுமானங்களைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

வெள்ளக்கட்டுப்பாட்டு அமைப்பு

இத்திட்டத்தின் பிரகாரம் களனி ஆற்றுப்பகுதியில் வெள்ளக்கட்டுப்பாட்டு அமைப்பும் தயாரிக்கப்பட உள்ளது.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.